மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x

தவளக்குப்பத்தில் கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

அரியாங்குப்பம்

தவளக்குப்பத்தில் கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கட்டிட தொழிலாளி

முருங்கப்பாக்கம் அடுத்த ஒட்டம்பாளையத்தை சேர்ந்தவர் பலராமன் (வயது 58). கட்டிட தொழிலாளி. இவருக்கு அமுதவள்ளி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இன்று காலை தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பு அருகே முரளி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் கட்டுமான பணியில் பலராமன் ஈடுபட்டார். இதற்காக கட்டிடத்தின் 2-வது மாடியில் பலராமன் ஏறினார்.

மின்சாரம் தாக்கியது

அப்போது அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின்கம்பியின் மீது எதிர்பாராத விதமாக பலராமன் உரசியதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார்.

இதை பார்த்த சக தொழிலாளர்கள் பலராமனை மாடியில் இருந்து கீழே எடுத்து வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தபோது, பலராமன் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story