சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 10 ஆண்டு் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

புதுச்சேரி

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 10 ஆண்டு் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கூலித்தொழிலாளி கைது

புதுச்சேரி நெட்டப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). கூலித்தொழிலாளி. கடந்த 2019-ம் ஆண்டு 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நெட்டப்பாக்கம் போலீசாரால் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

10 ஆண்டு சிறை

இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 366 பிரிவின் கீழ் (கடத்தல்) 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 342 பிரிவின் கீழ் (அடைத்து வைத்தல்) 6 மாத சிறை தண்டனையும், 506 (2) பிரிவின் கீழ் (கொலை மிரட்டல்) 3 ஆண்டு சிறை தண்டனையும், போக்சோ வழக்கு (பிரிவு 6-ன் கீழ் பாலியல் பலாத்காரம்) 10 ஆண்டு சிறை தண்டனையும், போக்சோ வழக்கு (பிரிவு10-ன் கீழ் பாலியல் துன்புறுத்தல்) 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 25 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏக காலத்தில் 10 ஆண்டுகளில் அனுபவிக்க வேண்டும்.

அதேபோல் ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து தலைமை நீதிபதி செல்வநாதன் தீர்ப்பு அளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலமுருகன் ஆஜரானார்.


Next Story