தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

புதுச்சேரியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி

புதுவை சொக்கநாதன்பேட்டை விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் குகன் (வயது 30). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.நிரந்தர வேலை எதுவும் இல்லாதால் அவர் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு அவரது பெற்றோர் அவ்வப்போது ஆறுதலும் கூறி வந்தனர்.

இந்த நிலையில் பெற்றோர் வெளியூர் சென்றிருந்த நிலையில், வீட்டில் குகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story