சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீ பற்றிய கார்... மதுரையில் பரபரப்பு

கார் தீ பற்றியதை பார்த்த 4 பேரும் அவசர அவசரமாக காரை விட்டு வெளியேறினர்.
மதுரை,
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் அருகே கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 4 பேர் பயணம் செய்தனர். அப்போது கார் ஏவி பாலத்தின் மீது சென்றபோது திடீரென காரில் தீ பிடித்தது.
இதனைக்கண்ட 4 பேரும் அதிர்ச்சியில் காரை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர். இதனையடுத்து கார் பற்றி எரியத்தொடங்கியது. இது குறித்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருப்பினும் கார் தீயில் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






