சென்னைக்கு ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது

கஞ்சா யாருக்கு கடத்தப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னைக்கு ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது
Published on

சென்னை,

ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக தனிப்படை போராருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சென்ட்ரல் வந்த ரெயில் பயணிகளை கண்காணித்தனர். அப்போது எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த அண்ணாமலை(33) என்பலர் ஆந்திர மாநிலத்தில் இருந்து ரூ.37ஆயிரம் கொடுத்து 5 கிலோ கஞ்சாலை வாங்கி கடத்தி வந்து இருப்பது தெரிந்தது.

இதையடுத்து அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் மீது ஏற்கனவே 19 வழக்குகள் உள்ளது தெரியலந்தது. கஞ்சா யாருக்கு கடத்தப்பட்டது? கஞ்சா விற்பனை கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.   

X

Daily Thanthi
www.dailythanthi.com