சட்டசபை கூட்டத் தொடர் முடித்துவைப்பு


சட்டசபை கூட்டத் தொடர் முடித்துவைப்பு
x

FILEPIC

கடந்த அக்டோபர் மாதம் 14-ந் தேதி மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது.

சென்னை,

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் ஜனவரி மாதம் 6-ந் தேதி தொடங்கியது. அதன்பிறகு, மார்ச் மாதம் 14-ந் தேதி 2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், 15-ந் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதமும் நடந்தது. தொடர்ந்து, துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதமும் நடந்து முடிந்தது. அதன்பிறகு, கடந்த அக்டோபர் மாதம் 14-ந் தேதி மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டத் தொடரை முடித்துவைப்பதாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடந்த ஜனவரி 6-ந்தேதி தொடங்கிய சட்டசபை கூட்டத் தொடர் முடித்து வைக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story