திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

கஞ்சாவை கடத்தி வந்த பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி,
திருச்சி விமான நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பாங்காக்கில் இருந்து கொழும்பு வழியாக திருச்சிக்கு வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான 9 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கஞ்சாவை கடத்தி வந்த பயணியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






