கிராண்ட்மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


கிராண்ட்மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 30 Oct 2025 8:56 PM IST (Updated: 30 Oct 2025 10:07 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டின் 35-வது மற்றும் இந்தியாவின் 90-வது கிராண்ட் மாஸ்டராக இளம்பரிதி உருவெடுத்துள்ளார்.

சென்னை,

போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவில் நடைபெற்ற பிஜெல்ஜினா ஓபன் போட்டியின் மூலம் தமிழ்நாட்டின் 35-வது மற்றும் இந்தியாவின் 90-வது கிராண்ட் மாஸ்டராக ஏ.ஆர்.இளம்பரிதி உருவெடுத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், கிராண்ட்மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"சதுரங்கத்தில் தமிழ்நாட்டின் 35வது கிராண்ட்மாஸ்டராக இளம்பரிதி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டின் சாம்பியன் கிரீடத்தில் அவர் மற்றொரு ரத்தினத்தைச் சேர்த்துள்ளார். தமிழ்நாடு சதுரங்கத்தில் சூரியன் உதிக்கும் போது இன்னும் பல கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகின்றனர்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story