தேனியில் 12-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது

வகுப்பறையில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
தேனி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, ஆங்கில ஆசிரியர் ரஞ்சித் குமார் என்பவர் வகுப்பறையில் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. மேலும் மாணவியின் செல்போனுக்கு ரஞ்சித் குமார் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள், ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் ஆசிரியர் ரஞ்சித் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story






