விசில் சின்னம் ஒதுக்கியது மகிழ்ச்சி - என்.ஆனந்த்


விசில் சின்னம் ஒதுக்கியது மகிழ்ச்சி - என்.ஆனந்த்
x

தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதனால், இந்த முறை நான்கு முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகியுள்ளது.

ஜனநாயகன் படப் பிரச்சினை, சிபிஐ விசாரணை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை விஜய் சந்தித்து வரும் நிலையில், தவெகவிற்கு பொதுச் சின்னம் கிடைக்குமா? என்பது தொடர்பாக கடந்த சில நாட்களாக அக்கட்சி தொண்டர்கள் இடையே விவாதம் அதிகரித்தது.

இந்த நிலையில், விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் விசில் சின்னம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கூறியதாவது,

தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியதில் மகிழ்ச்சி; இதுதான் எங்களுக்கு வெற்றி சின்னம். எங்கள் கட்சி தலைவர் சொன்ன அடுத்த நிமிடமே மக்களிடம் சின்னம் சென்று சேர்ந்துவிடும். என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story