பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு அரியலூரில் ஹெலிபேட் அமைப்பு

பிரதமர் நரேந்திர மோடி 27-ந்தேதி கங்கைகொண்ட சோழபுரம் வருகை தர உள்ளார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா ஐந்து நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவின் கடைசி நாளான 27-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி கங்கைகொண்ட சோழபுரம் வருகை தர உள்ளார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு அரியலூரில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி வரக்கூடிய ஹெலிகாப்டர் தரையிறங்கும் தளம் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் முன்னதாக குருபாலப்பர் கோவில் அருகே அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story






