மும்பை - சென்னை இடையே இண்டிகோ விமான சேவை ரத்து

கோப்புப்படம்
மும்பையில் வரலாறு காணாத அளவில் இன்று மழை பெய்து வருகிறது.
மும்பை,
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மும்பையில் வரலாறு காணாத அளவில் இன்று மழை பெய்து வருகிறது. அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் மட்டுமல்லாது, அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மும்பையில் நிலவும் தொடர் மழை, மோசமான வானிலை காரணமாக விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், மும்பை - சென்னை இடையே 4 விமானங்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





