கும்பகோணம்: குடமுழுக்கு விழாவில் கூட்ட நெரிசல் - 6 பேர் மயக்கமடைந்ததால் பரபரப்பு


கும்பகோணம்: குடமுழுக்கு விழாவில் கூட்ட நெரிசல் - 6 பேர் மயக்கமடைந்ததால் பரபரப்பு
x

மயக்கமடைந்த பக்தர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தஞ்சாவூர்,

கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது. கும்பகோணம் மகாமகத் திருவிழா தொடர்புடைய 12 சைவ திருத்தலங்களில் முதன்மையான இத்தலத்தில் ஸ்ரீ மங்களாம்பிகா சமேத ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 5-ந்தேதி குடமுழுக்கு விழா நடந்தது.

தொடர்ந்து வரும் 2028-ம் ஆண்டில் மகாமக விழா நடைபெற உள்ள சூழலில், கோவில் குடமுழுக்கு விழாவை நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து குடமுழுக்கு செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 23-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் நடந்து வந்தன.

பணிகள் நிறைவடைந்து இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் 6 பேர் மயக்கமடைந்தனர். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மயக்கமடைந்த பக்தர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் மயக்கமடைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story