விசாரணை கைதி மரண வழக்கு - டி.எஸ்.பி.க்கு ஆயுள் தண்டனை

டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 8 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 18.09.1999 தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் வின்சென்ட் என்பவர் மரணம் அடைந்த வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்டம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த விசாரணையின் போது தற்போதைய டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 8 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதமாக விதித்து அமர்வு நீதிமன்ற நீதிபதி தாண்டவம் உத்தரவு பிரப்பித்தார்.
இதனை தொடர்ந்து காவலர்கள் 8 பேர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





