விசாரணை கைதி மரண வழக்கு - டி.எஸ்.பி.க்கு ஆயுள் தண்டனை


விசாரணை கைதி மரண வழக்கு - டி.எஸ்.பி.க்கு ஆயுள் தண்டனை
x

டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 8 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கடந்த 18.09.1999 தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் வின்சென்ட் என்பவர் மரணம் அடைந்த வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்டம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த விசாரணையின் போது தற்போதைய டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 8 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதமாக விதித்து அமர்வு நீதிமன்ற நீதிபதி தாண்டவம் உத்தரவு பிரப்பித்தார்.

இதனை தொடர்ந்து காவலர்கள் 8 பேர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

1 More update

Next Story