நீர்வளத்துறையில் இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிக்கான பணி நியமன ஆணைகள் - அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்


நீர்வளத்துறையில் இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிக்கான பணி நியமன ஆணைகள் - அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்
x

நீர்வளத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 77 தெரிவாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

சென்னை,

நீர்வளத்துறையில் இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர் துரைமுருகன் இன்று வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“நீர்வளத்துறையில் 2024-2025 ஆண்டில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான (பட்டயம்), தேர்வின் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை வரைதொழில் அலுவலர் (சிவில்) பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு, நீர்வளத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 77 தெரிவாளர்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (15.10.2025) பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறையின் செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது), சு.கோபாலகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story