மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை


மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
x

கீழப்பாவூர் மற்றும் மங்கம்மாள் சாலை உபமின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தென்காசி

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டம், தென்காசி கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கீழப்பாவூர் மற்றும் மங்கம்மாள் சாலை உபமின் நிலையத்தில் நாளை மறுநாள் (10.6.2025, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் அந்த உபமின் நிலையங்களில் பின்வரும் நேரத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை:

தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்தி நகர், காளிதாசன் நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் கீழப்புலியூர். தென்காசி, பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்காலிப்பட்டி, சின்ன நாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டினம் வடக்கு, சாலைப்புதூர் ஆகிய இடங்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story