மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மறுநாள் மின்தடை


மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மறுநாள் மின்தடை
x

தூத்துக்குடியில் வாகைகுளம், விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி ஆகிய உபமின் நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மின்பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாகைகுளம், விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி ஆகிய உபமின் நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் (6.9.2025, சனிக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி வாகைகுளம் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (6.9.2025, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வாகைகுளம் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான சேர்வைகாரன்மடம், சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல், ராமச்சந்திராபுரம், ஏர்போர்ட், செல்வம்சிட்டி, பவானிநகர், கூட்டாம்புளி, குலையன்கரிசல், போடம்மாள்புரம், சிறுபாடு, திரவியபுரம், புதுக்கோட்டை அம்மன்கோவில் தெரு, மறவன்மடம், அந்தோனியார்புரம், பைபாஸ், டோல்கேட், கோரம்பள்ளம், வர்த்தகரெட்டிபட்டி, தெய்வசெயல்புரம், வல்லநாடு, அனந்தநம்பிகுறிச்சி, எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலூரணி விலக்கு, முருகன்புரம், ஈச்சந்தாஓடை, நாணல்காட்டான்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார்குளம் ஆகிய இடங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் உபமின் நிலையத்தில் நாளை மறுநாள் (6.9.2025, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் விளாத்திகுளம் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன்பொம்மையாபுரம், ராமசந்திராபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

குளத்தூர்:

குளத்தூர் உபமின் நிலையத்தில் நாளை மறுநாள் (6.9.2025, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் குளத்தூர் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான கீழவைப்பார், வைப்பார், வேப்பலோடை, குளத்தூர், மார்த்தாண்டம்பட்டி, முள்ளுர் அதனை சுற்றியுள்ள ஊர்களில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

சூரங்குடி:

சூரங்குடி உபமின் நிலையத்தில் நாளை மறுநாள் (6.9.2025, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சூரங்குடி உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story