வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து 2024-25-ம் ஆண்டு பாசனத்திற்கு நாளை(14.12.2024 )முதல் 120 நாட்களுக்கு வினாடிக்கு 120 கன அடி வீதம் (ஒரு நாளைக்கு 10.37 மி.கன அடி வீதம்) தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் 24,059 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





