அபாய சங்கிலியை இழுத்து நடுவழியில் ரெயிலை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்



வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சென்னை ,
சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற விரைவு ரெயிலில் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தி பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜோலார்பேட்டை அருகே ஏசி இயங்காததால் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நடுவழியில் நிறுத்தி பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தண்டவாளத்தில் இறங்கி பயணிகள் வாக்குவாதம் செய்ததால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது .
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire