அபாய சங்கிலியை இழுத்து நடுவழியில் ரெயிலை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்


அபாய சங்கிலியை இழுத்து நடுவழியில் ரெயிலை  நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்
x

வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சென்னை ,

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற விரைவு ரெயிலில் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தி பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜோலார்பேட்டை அருகே ஏசி இயங்காததால் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நடுவழியில் நிறுத்தி பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தண்டவாளத்தில் இறங்கி பயணிகள் வாக்குவாதம் செய்ததால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது .



1 More update

Next Story