6 மாவட்டங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது.
6 மாவட்டங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்
Published on

குழந்தைகள் போலியோ வைரஸ் நோயால் பாதிக்கப்படாமல் இருக்க நாடு முழுவதும் அவ்வப்போது போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்திலும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. போலியோ வைரஸ் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, விருதுநகர்ம் ஆகிய 6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது.

5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com