பொங்கல் பண்டிகை: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரெயில் டிக்கெட்டுகள்

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை கொண்டாட பெரும்பாலானோர் சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வார்கள். பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரெயில் டிக்கெட் முன்பதிவு முன்பே தொடங்கும்.
அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி போகி பண்டிகை, 15-ந்தேதி பொங்கல் பண்டிகை, 16-ந்தேதி மாட்டுப் பொங்கல், 17-ந்தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்த நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 2 நிமிடங்களில் அனைத்து ரெயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. முக்கியமாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முயற்சி செய்தவர்களுக்கும், காலை 5 மணி முதலே கவுன்டரில் காத்திருந்த பயணிகள் பலருக்கும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.






