பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை - திருவாரூர் கோர்ட்டு உத்தரவு

பி.ஆர்.பாண்டியன் மீது 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை - திருவாரூர் கோர்ட்டு உத்தரவு
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம், விக்கிரப்பாண்டியம் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக போராடியபோது பொது சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இது சம்பந்தமான வழக்கு திருவாரூர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. இதன்படி விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com