சிவகங்கை: போலீஸ் வேன் மோதி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி

சிவகங்கையில் நடந்த விபத்தில், 2 வயது குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இரு சக்கர வாகனம் ஒன்றில் தம்பதி மற்றும் அவர்களுடைய குழந்தை சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுடைய வாகனம் மீது எதிரே வந்த போலீஸ் வேன் மோதியது.
இந்த விபத்தில், 2 வயது குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். போலீஸ் வேன் மோதியதில் ஒரே குடும்பத்தின் 3 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுதவிர, விபத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





