ராமேஸ்வரம் அருகே ரூ.80 லட்சம் மதிப்புள்ள கடத்தல் கடல் அட்டைகள் பறிமுதல்

ராமேஸ்வரம் அருகே ரூ.80 லட்சம் மதிப்புள்ள கடத்தல் கடல் அட்டைகளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம்
ராமேஸ்வரம் கடல் பகுதி அருகே கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படைப் பிரிவு கடத்தல் தடுப்பு நடவடிக்கையை விரைவாக மேற்கொண்டு அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று ராமேஸ்வரத்தை அடுத்த தெற்கு உச்சிப்புளி கடற்கரைக்கு அப்பால் சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த ரூ.80 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த நடவடிக்கையின் போது, சுமார் 200 கிலோ எடையுள்ள கடல் அட்டைகள் கொண்ட ஐந்து டிரம்களை கண்டுபிடித்து மீட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சந்தை மதிப்பு தோராயமாக ரூ. 80 லட்சம் ஆகும்.
Related Tags :
Next Story






