அமலாக்கத்துறை சோதனைக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை: எல்.முருகன் பேட்டி

அமலாக்கத்துறை என்பது ஒரு சட்டப்படியான அமைப்பு என எல்.முருகன் தெரிவித்தார்
சென்னை,
டாஸ்மாக் அமலாக்கத்துறை சோதனை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது.
இதில் ,டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்த தடை விதித்து ஆணையிட்டு, தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் பிறப்பித்தும் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் , இது தொடர்பாக சென்னையில் செய்தியளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய இணை மந்திரி எல் முருகன் கூறியதாவது,
அமலாக்கத் துறையின் சோதனைக்கும், மத்திய அரசுக்கும் தொடர்பில்லை.எங்கு தவறு நடந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு அமலாக்கத் துறை விசாரிக்கிறது.ஊழல் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டனைக்கு உள்ளாவார்கள். தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்.அமலாக்கத்துறை என்பது ஒரு சட்டப்படியான அமைப்பு. அமலாக்கத்துறை சட்டத்துக்கு உட்பட்டு வழக்கை எதிர்கொள்ளும். என தெரிவித்தார் .