இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 Dec 2025 6:31 PM IST
புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை காவல் நிலைய எஸ்.ஐ. சங்கர், ரூ.10,000 லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார். நிலம் தொடர்பான பிரச்னையில் சி.எஸ்.ஆர். போடுவதற்கு லஞ்சம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 12 Dec 2025 6:15 PM IST
3 தலைவரும் கண்ட கனவுதான் இது - நடிகர் சத்யராஜ் பேச்சு
இந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்க பெரியாரும், அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் இல்லையே என்ற வருத்தம் இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் கண்ட கனவுதான் இது. எதை பார்த்தும் ஏமாந்துவிடாதீர்கள். சாதனைகளின் பக்கம் நில்லுங்கள் என வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்வில் நடிகர் சத்யராஜ் பேசினார்.
- 12 Dec 2025 5:12 PM IST
நடிகை பாலியல் துன்புறுத்தல் - 6 பேருக்கு 20 ஆண்டு சிறை
கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் 6 பேருக்கு 20 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது.பட்சர் சுனில், மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜிஷ், சலீம், பிரதீப்புக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. நடிகையின் உதவியாளரான சுனில் என்கிற பல்சர் சுனில் முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தார்.
நடிகையின் கார் ஓட்டுநர் மார்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜேஷ், சலீம், பிரதீப் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்படிருந்த 8-வது நபரான நடிகர் திலீப்பை விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி நடிகர் திலீப்பை விடுதலை செய்திருந்தது எர்ணாகுளம் நீதிமன்றம்.
- 12 Dec 2025 4:33 PM IST
மதுரை எய்ம்ஸ் திட்டம் 42 சதவீதம் நிறைவு: மத்திய அரசு
மதுரை எய்ம்ஸ் திட்டப் பணிகள் 42 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. அடுத்தாண்டு அக்டோபருக்குள் பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் குறித்த திமுக எம்.பி. அருண் நேருவின் கேள்விக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
- 12 Dec 2025 4:21 PM IST
2027 மார்ச் 1-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் - மத்திய அரசு அறிவிப்பு
மக்கள் தொகைகணக்கெடுப்புக்கு ரூ.11,719 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் வழங்கி உள்ளது. 2011-ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் 2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக நடைபெற உள்ளது. 2027-ம் ஆண்டு மார்ச் 1-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கி இரு கட்டமாக நடைபெறும்.
- 12 Dec 2025 4:20 PM IST
திருப்பரங்குன்றம் தூபத்தூண் சர்ச்சை வழக்கு ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது மதுரை ஐகோர்ட்டு.
- 12 Dec 2025 3:59 PM IST
மேகதாது அணை திட்டத்தில் கர்நாடகா அரசு மும்முரம்
மேகதாது அணை திட்டத்தை அமல்படுத்த 30 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவை அமைத்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்ற கர்நாடகா அரசு மும்முரம் காட்டி வருகிறது. பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள ராம்நகரின் மேகதாது பகுதியில் அணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடக விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
- 12 Dec 2025 2:34 PM IST
மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், சஸ்பெண்ட் ஆன டி.எஸ்.பி. சண்முக சுந்தரத்தை ஏ7 ஆக சேர்த்து மதுரை நீதிமன்றத்தில் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
- 12 Dec 2025 2:30 PM IST
தெரு நாய் தொல்லை அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் உள்ள கால பைரவர் கோவிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன. சிறப்பு அபிஷேகத்துடன் கூடிய சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
- 12 Dec 2025 1:53 PM IST
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தேவையில்லாத ஈகோ உருவாகிறது - ஐகோர்ட்டு மதுரை கிளை
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தேவையில்லாத ஈகோ உருவாகிறது என்றும், 1920இல் இருந்து இது போன்ற பிரச்சனை எழுந்து வருகிறது என்றும், இதற்கு நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என்றும் நீதிபதிகள் ஜெயசந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
இதனிடையே மரபு உரிமைகளை கோவில் நிர்வாகம் கடைப்பிடித்து வரும் நிலையில் கோர்ட்டு தலையிடக் கூடாது என்றும், மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் அல்ல என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
















