தூத்துக்குடி: சீரமைக்கப்பட்ட உயர்மட்ட பாலம் மீண்டும் சேதம்

தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா மட்டுமின்றி தென்மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் சேதமடைந்துள்ளது. இந்த பாலம் கடந்த 2023ம் ஆண்டு பெய்த கனமழை, வெள்ளத்தில் சேதமடைந்தது.
இதையடுத்து, பாலம் மீண்டும் சீரமமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக உயர்மட்ட மேம்பாலம் மீண்டும் சேதமடைந்துள்ளது. பாலத்தில் உள்ள சாலையில் பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து உயர்மட்ட பாலத்தில் ஏற்பட்ட பள்ளம் தற்காலிகமாக சரி செய்யப்பட்டு மீண்டும் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சீரமைக்கப்பட்ட உயர்மட்ட பாலம் மீண்டும் சேதமடைந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story






