வேதாரண்யம்: கோடியக்காடு திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


வேதாரண்யம்: கோடியக்காடு திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம் தாலுகா கோடியகாட்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோவில் அஷ்டபந்தன குடமுழுக்கு பெருவிழா விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, வாஸ்து சாந்தியுடன் முதல்கால பூஜையுடன் பூர்ணாஹுதி நடைப்பெற்றது.

இன்று காலை 4ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க, கடம் புறப்பாடு நடைபெற்றது.

பின்னர் மல்லாரி ராகம் முழங்க, கடமானது கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள், திரௌபதி அம்மன் கோவிலின் கோபுரம் மற்றும் மூலஸ்தானத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

அதனை தொடர்ந்து பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

12 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story