8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு


8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
x

குமரி உட்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக காலை 10 மணி வரை தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story