இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்


இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
x

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.

சென்னை ,

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், திருவள்ளூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருச்சி, தஞ்சாவூர், தேனி, கரூர், மதுரை, விருதுநகர், மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story