இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
சென்னை,
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் பின்வரும் மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் விபரம்:
இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் : வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம்.
லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: திருவள்ளூர், சென்னை, நாமக்கல், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி






