ஆசிய கோப்பை வரலாற்றில் முதல் வீரராக மாபெரும் சாதனை படைத்த அபிஷேக் சர்மா


ஆசிய கோப்பை வரலாற்றில் முதல் வீரராக மாபெரும் சாதனை படைத்த அபிஷேக் சர்மா
x

image courtesy:BCCI

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா இதுவரை 309 ரன்கள் அடித்துள்ளார்.

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த சூப்பர்4 சுற்றின் 6-வது மற்றும் கடைசி லீக்கில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 61 ரன்களும், திலக் வர்மா 49 ரன்களும் அடித்தனர்.

இந்த ஆட்டத்தில் அடித்த ரன்களையும் சேர்த்து அபிஷேக் ஷர்மா நடப்பு தொடரில் இதுவரை 3 அரைசதம் உள்பட 309 ரன்கள் (6 ஆட்டம்) குவித்துள்ளார். இதன் மூலம் ஆசிய கோப்பை 20 ஓவர் வடிவில் 300 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற அபார சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன்பு பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 281 ரன்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள அபிஷேக் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

பின்னர் 203 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியும் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் அடித்தது. இதனால் ஆட்டம் சமன் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 107 ரன்கள் குவித்தார். இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 5 பந்தில் 2 விக்கெட்டையும் இழந்து 2 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய இந்தியா முதல் பந்திலேயே 3 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

1 More update

Next Story