இன்று பிரதமர் மோடியை சந்திக்கும் இந்திய வீராங்கனைகள்


இன்று பிரதமர் மோடியை சந்திக்கும் இந்திய வீராங்கனைகள்
x

Image Courtesy: @BCCIWomen

மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

புதுடெல்லி,

மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நவிமும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதன்முறையாக மகளிர் அணி ஐ.சி.சி தொடரை வென்று சாதனைப் படைத்தது.

இதனால் பி.சி.சி.ஐ 50 கோடி ரூபாய்க்கு அதிகமான பரிசுத்தொகையை மகளிர் அணிக்கு அறிவித்து கவுரவித்தது. இந்நிலையில், இந்திய மகளிர் அணி வீராங்கனைகள், இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற உள்ளனர்.

இதற்காக டெல்லி வந்த இந்திய வீராக்கனைகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

1 More update

Next Story