ஐபிஎல்: 4 வீரர்களை விடுவிக்க பெங்களூரு அணி திட்டம்


ஐபிஎல்: 4 வீரர்களை விடுவிக்க பெங்களூரு அணி திட்டம்
x

பெங்களூரு அணி விடுவிக்கும் வீரர்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது

பெங்களூரு,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நாளைக்குள் 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பெங்களூரு அணி விடுவிக்கும் வீரர்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது . அதன்படி 4 வீரர்களை விடுவிக்க பெங்களூரு அணி திட்டமிட்டுள்ளது.

*மயங்க் அகர்வால்

*லியாம் லிவிங்ஸ்டோன்

* பிளெஸ்ஸிங் முசரபனி

*ராசிக் தர் .

இந்த வருடம் நடைபெற்ற 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ௬ ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது குறிப்பிடத்தக்கது

1 More update

Next Story