அரையிறுதிக்கு முன்னேறியது பெரிய நிம்மதியை தந்துள்ளது - ஸ்மிருதி மந்தனா


அரையிறுதிக்கு முன்னேறியது பெரிய நிம்மதியை தந்துள்ளது - ஸ்மிருதி மந்தனா
x

Image Courtesy: @BCCIWomen

ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

புதுடெல்லி,

ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் நவி​மும்​பை​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​திய அணி டக்​வொர்த் லீவிஸ் விதி​முறைப்​படி 53 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் நியூசிலாந்து அணியை வீழ்த்​தி​யது. இந்த வெற்​றி​யின் மூலம் இந்​திய அணி 6 புள்​ளி​களு​டன் கடைசி அணி​யாக அரையிறுதி சுற்​றுக்கு முன்னேறியது.

இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது பெரிய நிம்மதியை தந்துள்ளது என இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நாங்​கள் அரையிறுதிக்கு முன்​னேறி​யுள்​ளது எனக்கு மிகப்​பெரிய நிம்​ம​தி​யைத் தந்​துள்​ளது. கடந்த 3 ஆட்​டங்​கள் எங்​களுக்கு மிக​வும் கடின​மாக அமைந்​தன. இந்த 3 ஆட்​டங்​களி​லும் நாங்​கள் சிறப்​பாகவே விளை​யாடினோம்.

ஆனால் வெற்றி பெற​முடிய​வில்​லை. இந்​நிலை​யில் வாழ்வா சாவா ஆட்​டத்​தில் நாங்​கள் வெற்றி பெற்​றுள்​ளது எங்​களுக்கு மனநிம்​ம​தி​யைத் தந்​துள்​ளது. பிர​திகா ராவல் அற்​புத​மான இன்​னிங்ஸை வெளிப்​படுத்​தி​னார். களத்​தில் என்​னுடைய இயற்​கை​யான விளை​யாட்டை விளையாட அவர் அனுமதித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story