விசாகப்பட்டினம் மைதானத்தில் மிதாலி ராஜ் பெயரில் கேலரி திறப்பு


விசாகப்பட்டினம் மைதானத்தில்  மிதாலி ராஜ் பெயரில் கேலரி  திறப்பு
x

மிதாலி, ரவி கல்பனாவை கவுரவிக்கும் வகையில் அவர்களது கேலரிக்கு சூட்டப்பட இருப்பதாக ஆந்திர கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது.

விசாகப்பட்டினம்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள கேலரிக்கு, இந்திய பெண்கள் கிரிக்கெட்டுக்கு பெரும் பங்காற்றிய ஆந்திராவைச் சேர்ந்த மிதாலிராஜ் மற்றும் ரவி கல்பனா ஆகியோரது பெயரை சூட்ட வேண்டும் என தற்போதைய இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, ஆந்திர தகவல் நுட்பத்துறை மந்திரி நாரா லோகேசுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது கோரிக்கை விடுத்தார். இதை ஆந்திர அரசும் ஏற்றுக் கொண்டது. மிதாலி, ரவி கல்பனாவை கவுரவிக்கும் வகையில் அவர்களது பெயர் விசாகப்பட்டினம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள கேலரிக்கு சூட்டப்பட இருப்பதாக ஆந்திர கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது.

இந்த நிலையில் விசாகப்பட்டினம் மைதானத்தில் மிதாலி ராஜ், கல்பனா பெயரிலான கேலரி இன்று திறக்கப்பட்ட்டது . இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக மிதாலி, கல்பனா பெயரிலான கேலரி திறக்கப்பட்ட்டது .

1 More update

Next Story