ஆஸ்திரேலியா ஏ-க்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய ஏ அணி அறிவிப்பு

image courtesy:PTI
கே.எல்.ராகுல் மற்றும் சிராஜ் 2-வது போட்டிக்கான அணியில் இணைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மும்பை,
ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா ஏ அணிக்கெதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி வருகிற 16-ம் தேதி லக்னோவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின் படியே, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துருவ் ஜூரெல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணியில் அபிமன்யு ஈஸ்வரன், ஜெகதீசன், சாய் சுதர்சன், நிதிஷ் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா போன்ற திறமையான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அத்துடன் 2-வது போட்டிக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுல் மற்றும் முகமது சிராஜ் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்திய அணி விவரம்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், என் ஜெகதீசன், சாய் சுதர்சன், துருவ் ஜூரல், தேவ்தத் படிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் பதோனி, நிதிஷ் குமார் ரெட்டி, தனுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், கலீல் அகமது, யாஷ் தாகூர்.






