ஆர்சிபி-க்கு முதல் கோப்பையை வென்று கொடுப்பீர்களா..? யாரும் எதிர்பார்க்காத பதிலை அளித்த படிதார்


ஆர்சிபி-க்கு முதல் கோப்பையை வென்று கொடுப்பீர்களா..? யாரும் எதிர்பார்க்காத பதிலை அளித்த படிதார்
x

image courtesy:PTI

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் படிதாரிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டது.

பெங்களூரு,

எல்லையில் இந்தியா- பாகிஸ்தான் மோதலால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கும் 58-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

நடப்பு தொடரில் புதிய கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகள் பெற்ற நிலையில் பிளே ஆப் சுற்று வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்துள்ளது. இதனால் 18 ஆண்டு கால கோப்பை ஏக்கத்தை இந்த முறை புதிய கேப்டன் தலைமையில் பெங்களூரு தணிக்கு என்று அந்த அணியின் ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ரஜத் படிதாரிடம், ஆர்சிபி அணிக்கு முதல் கோப்பையை வென்று கொடுப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த படிதார், "எங்களிடம் கோப்பை உள்ளது. எங்களது மகளிர் அணி ஏற்கனவே கோப்பையை வென்றுள்ளது. அது எங்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிக்கிறது. எனவே எங்களிடம் கோப்பை இல்லை என்று யாரும் சொல்ல முடியாது" என யாரும் எதிர்பார்க்காத பதிலை அளித்தார்.

2024-ம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றதை சுட்டிக்காட்டி அவர் இந்த பதிலை அளித்துள்ளார்.

1 More update

Next Story