மகளிர் உலகக்கோப்பை: முன்னணி வீராங்கனை விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு


மகளிர் உலகக்கோப்பை: முன்னணி வீராங்கனை விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு
x

இவருக்கு பதிலாக உமா சேத்ரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை,

13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.

இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதன் தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அந்த அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி வீராங்கனை யாஸ்திகா பாட்டியா கால்முட்டி காயம் காரணமாக விலகி இருக்கிறார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவரது விலகல் இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக உமா சேத்ரி சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோல் எதிர்வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் யாஸ்திகா பாட்டியாவுக்கு பதிலாக உமா சேத்ரி சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி:

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன் ), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரத்திகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா , ஜெமிமா, ரேணுகா, அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ், கிராந்தி கவுட், அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், ஸ்ரீ சரணி, உமா சேத்ரி , சினே ராணா.

1 More update

Next Story