ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; கேரளா பிளாஸ்டர்ஸை வீழ்த்திய ஜாம்ஷெட்பூர் எப்.சி

image courtesy: @IndSuperLeague
11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஜார்க்கண்ட்,
13 அணிகளுக்கு இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஜார்க்கண்டில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் எப்.சி வெற்றி பெற்றது.
Related Tags :
Next Story






