ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; மும்பை-மோகன் பகான் ஆட்டம் 'டிரா'


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; மும்பை-மோகன் பகான் ஆட்டம்  டிரா
x

Image Courtesy: @IndSuperLeague / @MumbaiCityFC / @mohunbagansg

இன்று நடைபெற்று வரும் 2வது லீக் ஆட்டத்தில் கேரளா - ஜாம்ஷெட்பூர் அணிகள் ஆடி வருகின்றன.

மும்பை,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது.

இதில் மாலை 5 மணிக்கு மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. - மோகன் பகான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய மோகன் பகான் அணி 2 கோல்கள் (32, 41-வது நிமிடம்) அடித்து அசத்தியது. இதன் காரணமாக முதல் பாதி முடிவில் மோகன் பகான் 2-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் மும்பை அணி ஆதிக்கம் செலுத்தியது. இதன் காரணமாக அந்த அணி 2 கோல்கள் (57, 89வது நிமிடம்) அடித்து ஆட்டத்தை சமன் செய்தது. இதையடுத்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.

இறுதியில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தொடரில் கேரளாவில் இன்று நடைபெற்று வரும் 2வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. - ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் ஆடி வருகின்றன.

1 More update

Next Story