புரோ கபடி லீக்: தொடக்க ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் வெற்றி


புரோ கபடி லீக்: தொடக்க ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் வெற்றி
x

12-வது புரோ கபடி லீக் இன்று தொடங்கியது

விசாகப்பட்டினம்,

புரோ கபடி லீக் போட்டி 2014-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 12-வது புரோ கபடி லீக் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது . முதற்கட்ட லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 11-ந் தேதி வரை விசாகப்பட்டினத்திலும், அடுத்த கட்ட ஆட்டங்கள் முறையே ஜெய்ப்பூர் (செப்.12-27), சென்னை (செப்.29- அக்.10), டெல்லி (அக்.11-23) ஆகிய இடங்களிலும் நடைபெறுகிறது. ‘பிளே-ஆப்’ சுற்று அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்

தொடக்க நாளான இன்று இரு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன . அதன்படி முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின . பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 38-35 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

பெங்களூரு புல்ஸ்- புனேரி பால்டன் அணிகள் இடையேயான மற்றொரு ஆட்டம் 32-32 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

1 More update

Next Story