புரோ கபடி லீக்: உ.பி. யோத்தாசை வீழ்த்திய அரியானா ஸ்டீலர்ஸ்

Image Courtesy: @ProKabaddi
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
புதுடெல்லி,
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த பெங்களூரு புல்ஸ்- பாட்னா பைரட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 32-32 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து முடிவை அறிய கொண்டு வரப்பட்ட டைபிரேக்கரில் பாட்னா அணி 6-5 என்ற புள்ளி கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது. பெங்களூரு வீரர் அலிரெஜா மிர்ஜாயன் 17 புள்ளிகள் திரட்டியும் பலன் இல்லை.
மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான யு மும்பா 33-26 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்து 8-வது வெற்றியை வசப்படுத்தியது.
தொடர்ந்து நேற்று நடைபெற்ற 3வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அரியானா ஸ்டீலர்ஸ் 53-26 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாசை வீழ்த்தி 8-வது வெற்றியை பெற்றது.
Related Tags :
Next Story






