சென்னையில் சர்வதேச ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் ஜோஸ்னா-அனாஹத்

இன்று நடக்கும் இறுதிசுற்றில் தமிழகத்தின் ஜோஸ்னா சின்னப்பா, டெல்லியை சேர்ந்த அனாஹத் சிங்குடன் மோதுகிறார்.
சென்னை,
எச்.சி.எல். இந்திய சுற்றுப்பயண சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் 4-வது சுற்று சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 6-11, 12-10, 11-1, 5-11, 11-5 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான தன்வி கண்ணாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 11-8, 11-6, 11-4 என்ற நேர்செட்டில் தென்ஆப்பிரிக்காவின் ஹெய்லி வார்டை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இன்று நடக்கும் இறுதிசுற்றில் தமிழகத்தின் ஜோஸ்னா சின்னப்பா, டெல்லியை சேர்ந்த அனாஹத் சிங்குடன் மோதுகிறார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த வேலவன் செந்தில்குமார் 13-11, 11-9, 5-11, 11-7 என்ற செட் கணக்கில் பிரான்சின் மாகோ லெவியை விரட்டியடித்து இறுதிப்போட்டியை எட்டினார். அவர் மகுடத்துக்கான ஆட்டத்தில் ஆதம் ஹவாலை (எகிப்து) எதிர்கொள்கிறார்.






