மாநில வாள்வீச்சு போட்டி - கன்னியாகுமரியில் 2 நாட்கள் நடக்கிறது


மாநில வாள்வீச்சு போட்டி - கன்னியாகுமரியில் 2 நாட்கள் நடக்கிறது
x

கோப்புப்படம்

மாநில சீனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி அமிர்தகம் வாள்வீச்சு பயிற்சி மையத்தில் நாளையும், நாளை மறுதினமும் நடக்கிறது.

சென்னை,

தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் இடைக்கால கமிட்டி சார்பில் மாநில சீனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி கன்னியாகுமரி மாவட்டம் ஆத்தூர் கல்லுபாலத்தில் உள்ள அமிர்தகம் வாள்வீச்சு பயிற்சி மையத்தில் நாளையும், நாளை மறுதினமும் நடக்கிறது.

இதன் அடிப்படையில் தேசிய சீனியர் போட்டிக்கான தமிழக அணிகள் தேர்வு செய்யப்படும். இந்த தகவலை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் கன்வீனர் வி.கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story