உலகக் கோப்பை ஸ்குவாஷ்: இந்திய அணி காலிறுதிக்கு தகுதி


உலகக் கோப்பை ஸ்குவாஷ்: இந்திய அணி காலிறுதிக்கு தகுதி
x

இந்திய அணி காலிறுதியில் தென் ஆப்பிரிக்கா உடன் மோத உள்ளது.

சென்னை,

5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.

இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 4-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை தோற்கடித்தது. அடுத்த ஆட்டத்தில் பிரேசிலுடன் மல்லுகட்டியது. இதில் தேசிய சாம்பியனான தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார் 7-5, 7-2 மற்றும் 7-2 என்ற நேர் செட்டில் பிரேசிலின் பெட்ரோ மோமெட்டோவை வீழ்த்தினார்.

இதேபோல் இந்தியாவின் அனாஹத் சிங் 7-4, 7-0 மற்றும் 7-2 என்ற செட்டில் லாரா சில்வாவையும், அபய்சிங் 7-3, 7-1 மற்றும் 7-1 என்ற செட்டில் டியாகோ கோப்பியையும் சாய்த்தனர். இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பாவை எதிர்த்து ஆட இருந்த புருனா மார்செசி விலகியதால் ஜோஸ்னா களம் இறங்காமலேயே வெற்றி பெற்றார்.

முடிவில் இந்தியா 4-0 என்ற கணக்கில் பிரேசிலை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்ததுடன் காலிறுதிக்கும் தகுதி பெற்று அசத்தியது.

இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மற்ற காலிறுதி ஆட்டங்களில் ஹாங்காங்- சுவிட்சர்லாந்து, ஜப்பான்- மலேசியா, ஆஸ்திரேலியா- எகிப்து அணிகள் மோதுகின்றன.

1 More update

Next Story