வியன்னா ஓபன் டென்னிஸ்: யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வியன்னா,

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி - சுவீடனின் ஆண்ட்ரியா கோரெசன் ஜோடி, குரோஷியாவின் மேட் பாவிக் - சால்வடாரின் மார்செலோ ஜோடி உடன் மோதியது.

இந்த போட்டியின் முதல் செட்டை 7-6 (8-6) என்ர புள்ளிக்கணக்கில் மேட் பாவிக் ஜோடியும், 2வது செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் யூகி பாம்ப்ரி ஜோடியும் கைப்பற்றியது.

தொடர்ந்து 3வது செட் தொடங்கும் முன்னரே மேட் பாவிக் ஜோடி காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியது. இதன் காரணமாக யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com