விம்பிள்டன் டென்னிஸ்; அரினா சபலென்கா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

கோப்புப்படம்
அரினா சபலென்கா (பெலாரஸ்), செக் குடியரசின் மேரி பௌஸ்கோவா உடன் மோதினார்.
லண்டன்,
ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் மிகவும் கவுரவமிக்கதும், முதன்மையானதுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), செக் குடியரசின் மேரி பவுஸ்கோவா உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் மேரி பவுஸ்கோவாவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
Related Tags :
Next Story






