வெந்நீர் பருகுவதால் கிடைக்கும் '5 நன்மைகள்'


வெந்நீர் பருகுவதால் கிடைக்கும் 5 நன்மைகள்
x

தண்ணீர் அருந்தும் விஷயத்தில் இன்று பலருக்கும் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. பிளாஸ்டிக் குடங்களைத் தவிர்த்துவிட்டு செப்பு தண்ணீர், மண்பானை தண்ணீர் என ஆரோக்கியமான முறையில் தண்ணீர் அருந்த முனைகின்றனர். இது நல்ல விஷயம்தான் என்றாலும் மருத்துவர்கள் தண்ணீரை கொதிக்க வைத்து வெந்நீராக குடிப்பது நல்லது என்கின்றனர். அறையின் வெப்பநிலையில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம்தான் என்றாலும் வெந்நீர் குடிப்பதால் இன்னும் பல கூடுதல் நன்மைகளைப் பெற முடியும். அவை என்னென்ன பார்க்கலாம்.

1. வெந்நீர் பொதுவாகவே செரிமான சக்தியை தூண்டுகிறது. அதுவும் சாப்பிட்ட பிறகு வெதுவெதுப்பாக காய்ச்சிய நீரை பருகினால் செரிமானம் எளிதில் நடைபெறும். இதனால் நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகள் இருக்காது.

2. நாம் குடிக்கும் நீரை கொதிக்க வைக்கும்போது அதில் உள்ள தொற்று கிருமிகள் அழிந்துவிடும். அதனால்தான் மழைக்காலத்தில் அதிகமாக சுடு தண்ணீரை குடிக்க பரிந்துரைக்கின்றனர். இந்த பழக்கத்தை எல்லா நேரங்களிலும் செய்வது இன்னும் நல்லது. இதனால் நீர் வழியாக பரவும் எந்த கிருமிகளும் நம்மை தாக்காது. எனவே குழந்தைகள், பெரியவர்கள் இருக்கும் வீட்டில் இதை கடைப்பிடிப்பது நல்லது.

3. அசைவ உணவு சாப்பிட்ட பிறகும் அவற்றை எளிதில் கரைக்க சுடு தண்ணீர் குடியுங்கள். அதற்காக சாப்பிட்ட உடனேயே குடிக்காதீர்கள். அரை மணி நேரம் கழித்து குடிக்கவும். குறிப்பாக பிரியாணி போன்ற மசாலா உணவுகளை சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் சுடு தண்ணீர் குடித்தால் வயிறு `ஹெவி'யாக இருக்காது.

4. சுடு தண்ணீரை உடல் எடையை குறைப்பவர்களும் முயற்சிக்கலாம். ஏனெனில் இது செரிமானத்தை தூண்டுவதால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் தேங்காமல் விரைவாக உணவுக் கலோரிகளை கரைத்துவிடும். அதேபோல் காலையில் எழுந்ததுமே சூடான தண்ணீர் குடிப்பதும் உடல் ஆற்றலை அதிகரிக்கும். அதன் பின் உடற்பயிற்சி செய்வது நல்லது.

5. சரும அழகைப் பராமரிக்கவும் சுடு தண்ணீர் உதவும்.


Next Story