இந்திய ரிசர்வ் வங்கி


இந்திய ரிசர்வ் வங்கி
x

இந்திய ரிசர்வ் வங்கி 1935-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் நடுவண் வங்கியான ரிசர்வ் வங்கி 1949-ம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும்.

நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி இயக்கியும் வருகிறது. பொதுமக்கள் மற்ற வங்கிகளை பயன்படுத்துவதுபோல் ரிசர்வ் வங்கியை பயன்படுத்த முடியாது. ஆனால் தனது முகமையை (ஏஜெண்ட்) ஏற்று செயலாற்ற பல வங்கிகளை அமைத்துள்ளது. அவ்வகையில் பாரத ஸ்டேட் வங்கி இதன் முகமை வங்கி ஆகும். ரிசர்வ் வங்கியை பொதுமக்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் பொதுமக்கள் நடத்தும் மற்ற வங்கிகளோடு தொடர்பு கொண்டு அவற்றைக் கண்காணித்தும் வருகிறது. இந்திய நாட்டின் நாணய மதிப்பு ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்திருக்கும் தங்கம், வெளிநாட்டு ரொக்கம் ஆகியவற்றை கொண்டே மதிப்பிடப்படுகிறது. முதலில் கொல்கத்தா நகரை தலைமையகமாக கொண்டு விளங்கிய இவ்வங்கி 1937-ம் ஆண்டு முதல் மும்பை நகரை தலைமையகமாக கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழுவதும் 22 வட்டார கிளைகள் உள்ளன.


Next Story